மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அரசு நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டு பாதியிலேயே வெளியேறியதால் சலசலப்பு ஏற்பட்டது..
சென்னை எழும்பூரில் பருவ கால காய்ச்சலை கட்டுப்படுத்த மருத்துவத்துரை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட 1000 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சியில் 100 செவிலியர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வந்திருந்தார்.. தமிழ்த்தாய் பாடல் முடிந்த உடனே அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார்..
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சரியாக செய்யவில்லை எனவும், பெயரளவில் மட்டுமே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் அதிகாரிகளை கடிந்து கொண்ட அமைச்சர்.. நிகழ்ச்சியை புறக்கணித்து புறப்பட்டு விட்டார்.. அதிகாரிகள் அவரை சமாதானம் செய்ய முயற்சித்த போதும், பெயரளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் தன்னால் கலந்து கொள்ள முடியாது என்று அரசு நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்..
அமைச்சரே அரசு நிகழ்ச்சியை புறக்கணித்ததால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.. எனினும் விரைவில் அமைச்சரை அழைத்து இந்த கருத்தரங்க நிகழ்ச்சியில் பெரிய அளவில் நடத்துவோம் என்று மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்..