fbpx

குடும்ப தகராறில் மகள் கண் முன்னே மனைவியை குத்திக் கொன்ற கணவன்…!!

புதுடெல்லியின் நவாடா பகுதியில் இருக்கும் அரசுப்பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியருக்கு மனைவியும் 9 வயதில் மகளும் இருக்கின்றனர். இந்நிலையில், ஆசிரியருக்கும் அவரது மனைவிக்கும் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

இதனால், அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஆசிரியருக்கும் அவரது மனைவிக்கும் நேற்று மாலை மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஆசிரியர் அவரது மகள் கண் முன்னே மனைவியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்.

இதுபற்றி தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது தாக்குதலுக்கு உள்ளான பெண் உயிரிழந்து இருந்தார். மகள் கண் முன்னே மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய ஆசிரியரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Rupa

Next Post

வணிகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு..!!

Sat Oct 1 , 2022
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்தை பொருத்தும் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பினர் மாதத்தின் முதல் தேதியில் நிர்ணயம் செய்து வருகின்றனர். வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.25.50 குறைந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலையை குறைத்துள்ளன. அந்த வகையில் சென்னையில் […]

You May Like