ஐடி நிறுவன ஊழியர்களே உஷார்..!! எந்த நேரமும் பணிநீக்கம் செய்யலாம்..!! காரணம் இதுதான்..!!

சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் ஐடி நிறுவனம் அதிகம் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் நியமனம் குறைக்கப்பட்டு வருகிறது.


தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் அனைத்து துறைகளும் பொருளாதாரத்தில் பின் தங்கி இருந்த நிலையில், ஐடி துறை எந்தவித மாற்றமும் இன்றி இயங்கி வந்தது. ஐடி ஊழியர்கள் வீடுகளில் இருந்தே 2 ஆண்டுகளாக வேலை செய்து வந்த நிலையில், இந்தாண்டு முதல் நேரடியாக அலுவலகம் சென்று வருகின்றனர். இந்நிலையில், தற்போது உலகளவில் அதிகமாக பொருளாதார நெருக்கடி இருந்து வருகிறது. அதனால், ஐடி துறைகளில் புதிய பணியாளர்கள் சேர்க்கை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐடி நிறுவன ஊழியர்களே உஷார்..!! எந்த நேரமும் பணிநீக்கம் செய்யலாம்..!! காரணம் இதுதான்..!!

நடப்பு ஆண்டின் மார்ச் மாதத்தில் இருந்து ஊழியர்களின் தேவை குறைந்துள்ள நிலையில், 10 – 20% வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. இதுகுறித்து adecco மதிப்பீடு அறிக்கையில் 8 வருடத்திற்கும் கீழான பணி அனுபவம் கொண்ட ஊழியர்கள், ஐடி மற்றும் ஐடி சார்ந்த துறையில் சுமார் 10 – 12% இருப்பதாக தெரிவித்துள்ளது. கொரோனா காலத்தில் நிறுவனங்கள் ஐடி பெரிய அளவில் ஒப்பந்தங்களை எடுத்தது. ஆனால், தற்போது அவை வெகுவாக குறைந்துள்ளது. அதனால் ஒப்பந்த ஊழியர்கள், பெஞ்ச் மார்க் ஊழியர்களை குறைத்து வருகின்றன. பல நிறுவனங்கள் கொரோனா காலத்தில் தங்களது சேவைகளை டிஜிட்டல் முறைக்கு மாற்றினார்கள்.

ஐடி நிறுவன ஊழியர்களே உஷார்..!! எந்த நேரமும் பணிநீக்கம் செய்யலாம்..!! காரணம் இதுதான்..!!

அதனால் ஐடி தேவை அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது நிலைமை அனைத்தும் மாறி இருக்கிறது. இப்படியே நிலைமை இருந்தால் ஒப்பந்த ஊழியர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். ஐடி நிறுவனங்களின் சுமார் 40% வருவாய் ஒப்பந்த ஊழியர்கள் இருக்கும் நிலையில், ஜூலை – செப்டம்பர் காலாண்டில் இவர்களின் தேவையானது 30% குறைந்துள்ளது. அதனால், இந்த நேரத்தில் ஐடி ஊழியர்கள் கவனத்துடன் வேலையை தக்க வைத்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

வாடகைத்தாய் மூலம்குழந்தை பெற என்ன விதிகளை பின்பற்ற வேண்டும்… !

Mon Oct 10 , 2022
வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ள சில சட்டத்திட்டங்களை கடந்த ஜனவரி 2022ல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அது தொடர்பான தகவல்களை பார்க்கலாம். வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்டம் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. வாடகைத் தாய் ஒழுங்குமுறை மசோதா மறுபரிசீலனை செய்த பின்னர் பிப்ரவரி 5, 2020ல் நிலைக்குழு முன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2021ம் ஆண்டு குளிர்காலக் கூட்டத்தொடரில் இரு அவைகளும் இது குறித்த மசோதாவை நிறைவேற்றியது. […]
pregnant woman in pink

You May Like