வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று இந்த 17 மாவட்டத்தில் கனமழை…!

தமிழகத்தில் இன்று 17 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழக மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வரும் 16,17 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Vignesh

Next Post

திடீர் மரணம்...! முக்கிய பிரபலம் மாரடைப்பால் காலமானார்... கண்ணீரில் திரையுலகம்...!

Fri Oct 14 , 2022
பிரபல ஒடியா திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை திலோத்தமா குந்தியா காலமானார். பிரபல ஒடியா திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை திலோத்தமா குந்தியா புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனையில் புதன்கிழமை மாலை காலமானார். அவருக்கு வயது 49. குந்தியா அக்டோபர் 5 ஆம் தேதி புவனேஸ்வரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு கணவர் […]
images 2022 10 14T063753.501

You May Like