கள்ளக்காதல் விவகாரத்தில் எடப்பாடி அருகே தொழிலாளி ஒருவர் படுகொலை செய்யப்படுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், எடப்பாடி கொங்கணாபுரம் அருகே கோரணம்பட்டி செந்தில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (57) இவர் ஒரு கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி என்பரது மனைவி கமலாவுக்கும்(56), முருகனுக்கும் பல ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.
இதையறிந்து கொண்ட கமலாவின் மகன் கார்த்தி, மருமகள் சுமதி ஆகியோர், தாயை கண்டித்துள்ளனர். அதனை சிறிதும் கேளாமல், அடிக்கடி கார்த்தியின் வீட்டிற்கு வந்து முருகன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை, கார்த்தியின் வீட்டிற்கு குடிபோதையில் வந்த முருகன், அங்கிருந்த சுமதியிடம் தகராறு செய்திருக்கிறார்.
அதனால் ஆத்திரமடைந்த சுமதி, அவரது தாய் அலமேலு (60), சுமதியின் மகன்கள் நித்திஷ், மவுலிஸ் அனைவரும் சேர்ந்து முருகனை கட்டி வைத்து கட்டையால் சரமாரியாக தாக்கிய நிலையில், படுகாயமடைந்த நிலையில், 4 பேரும் தப்பியோடி விட்டனர்.
மயங்கிய நிலையில் இருந்த முருகனை உறவினர்கள், எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று காலை முருகன் உயிரிழந்தார். இதனையடுத்து, கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து சுமதி, அலமேலு, நித்திஷ், மவுலிஸ் ஆகியோரை கைது செய்தனர்.