பிரபல இசையமைப்பாளர் திடீரென மரணம் அடைந்தது திரையுலகினரை சோகத்தில் மூழ்கடித்துள்ளார்.
சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் பிரபல இசையமைப்பாளர் ரகுராம். இவர் 2017ம் ஆண்டு வெளியான ஒரு கிடாயின் கருணை மனு படத்திற்கு இசை அமைத்திருந்தார். 2011ம் ஆண்டு ரீவைண்ட் , ஆசை படங்களின் மூலம் திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். இருப்பினும் இவருக்கு ஒரு கிடாயின் கருணை மனு இவருக்கு சிறந்த படமாக அமைந்தது.
சுரேஷ் சங்கையாவின் அடுத்து வரவுள்ள சத்ய சோதனை என்ற திரைப்படத்தில் பாடல்களை இயற்றி உள்ளார். அது தவிர இசை ஆல்பம் தயாரித்துள்ளார். திரைத்துறையில் இசை நிரலாளராகவும் இவர் பணியாற்றி இருக்கின்றார். கடந்த சில ஆண்டுகளாக இவர் தனது உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளாமல் இருந்து வந்துள்ளார்.
இதனால் இவருக்கு மோட்டார் நியூரான் நோய் (மூளை தொடர்பான நோய் ) தாக்கியுள்ளது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்த நோயால் இவரது கால்கள் நடக்கமுடியாமல் பாதிக்கப்பட்டது. சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து அவர் இன்று காலை உயிரிழந்தார். திடீரென உயிரிழந்த சம்பவம் அறிந்ததும் உறவினர்கள் , திரைத்துறையினர், இசையமைப்பாளர்கள் என அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ’ ஒரு சத்ய சோதனை திரைப்படத்தின் தயாரிப்பாளர் சமீர் பரத் ராம் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் , ’’ எங்கள் திரைப்படத்தின் சத்தியசோதனை திரைப்படத்தின் இசையமைப்பாளர் ரகுராம் இறந்தது அதிர்ச்சியை தருகின்றது. ஒரு கிடாயின் கருணை மனு படத்தில் அவர் பிரபலமாகியுள்ளார். மணிகண்டனின் குறும் படங்களில் இசை அமைத்துள்ளார். அவர் ஒரு இசை ஜீனிஸ். வெகு விரைவில் சென்றுவிட்டார். அவர் மோட்டார் நியூரான் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இசையமைப்பதற்காகவே வாழ வேண்டும் என நினைத்த ஒருவர் . அவர் இசையில் விரைவில் சத்திய சோதனை திரைப்படம் வெளியாக உள்ளது. உன் பாடல்கள் எப்போதும் நினைவூட்டும் ஆன்மா சாந்தி அடையட்டும் ’ என எழுதியுள்ளார்.