#Holiday: தொடரும் கனமழை…! இன்று அனைத்து பள்ளிக்கும் விடுமுறை…! அமைச்சர் உத்தரவு…!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.


புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை பெய்யும் என்ற சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பையொட்டி, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

நரம்பு தளர்ச்சி, காக்கா வலிப்பு நோய்க்கு மருந்தாகும் சடாமஞ்சில் பற்றி நீங்க கேள்வி பட்டு இருக்கீங்களா?

Thu Nov 3 , 2022
அதிக நறுமணம் கொண்ட மூலிகையான சடாமஞ்சில் என்ற மூலிகை அற்புதமான சக்திகளை கொண்டுள்ளது. நரம்புதளர்ச்சி உள்ளிட்ட எண்ணற்ற நோய்களுக்கு இதுமருந்தாகின்றது. சடாமஞ்சில் எனப்படும் மூலிகை எண்ணையை நல்லெண்ணெயுடன் சேர்த்து தலைக்கு குளித்து வந்தால் நரம்பு தளர்ச்சி குணம் அடையும். இதன் தண்டுகளும், வேர்களும் நமக்கு மூலிகை கடைகளில் கிடைக்கின்றது. இதன் அனைத்து பாகங்களும் உடலுக்கு நன்மை அளிக்கின்றது. தோல் சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும் பண்புகளை இது கொண்டுள்ளதால் சருமத்தில் […]
maxresdefault 1

You May Like