உணவு கொண்டுவர தாமதம்.. ஓட்டல் ஊழியருக்கு நேர்ந்த கதி.!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதியில் அன்சல் பிளாசா பகுதியில் ஒரு உணவகம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு மூன்று நண்பர்கள் அங்கு வந்து சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தனர்.


பிரியாணி கொண்டு வர தாமதம் ஆனது. இதனால், அந்த மூன்று பேரில் ஒருவர் ஆத்திரமடைந்து இங்கிருந்த உணவக ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் உணவக ஊழியருக்கு காயம் ஏற்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தினால் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து சம்பந்தப்பட்ட மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உணவு கொண்டு வர தாமதமான காரணத்தால் ஹோட்டல் ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மது போதையில் இருந்தார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

காதலி கிடைக்காத விரக்தி.. பேஸ்புக் லைவில் இளைஞர் தற்கொலை.!

Fri Nov 11 , 2022
உத்தரபிரதேசம் மாநில பகுதியில் வசிக்கும் இளைஞன் தன் காதலி தனக்கு துரோகம் செய்ததாக கூறி பேஸ்புகில் லைவ் மூலம் கழுத்தை அறுத்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக்கில் லைவ் வீடீயோவில், ​​அந்த இளைஞன் தான் காதல் செய்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்களை கடுமையாக விமர்சித்து திட்டியுள்ளார். இந்த நிலையில் , பலரும் அவரை தற்கொலை செய்ய விடாமல்தடுத்துள்ளனர். ஆனால் அதையும் மீறி மிக வேதனையுடன் தனது உயிரை மாய்த்துக் […]
n4406888061668143497674606da6baceb3ace81a3a53043434cd7f545201a5c56f98d46c9a4cb8db6f4a50

You May Like