ரசிகர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த நடிகர் ரஜினிகாந்த் அவரது மொத்த செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளார் …
தமிழ்சினிமாவில் பிரபலநடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் ஒரு படத்திலும் , மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்புதோற்றத்திலும் நடிக்கின்றார்.
ஒரு நடிகராக மட்டும் இன்றி சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகின்றார். அந்த வகையில் ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்தவரும் நெருங்கிய நண்பருமான சுதாகர் என்பவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகின்றார். இவர் புற்று நோய் மருத்துவ சிகிச்சைக்கான மொத்த செலவையும் ரஜினி ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த தகவலை சுதாகர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் . மேலும் தன்னுடைய ரசிகருக்கு ரஜினிகாந்த் உதவி செய்வதை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் ரஜினியை வெகுவாக பாராட்டி வருகின்றார்கள்.
தென்னிந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளாக சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்தை தக்கவைத்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த. ரஜினிகாந்ந் திரை வாழ்க்கையை தொடங்கியது முதலே தன்னுடைய கடின உழைப்பினால் படிப்படியாக வில்லன் நடிகரில் இருந்து இன்று இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் தன்னை தெரியும் படி பிரபலமாகியுள்ளவர்தான் நடிகர் ரஜினிகாந்த்.
இந்நிலையில் ரஜினிக்கு கீழ் பணியாற்றி வந்த இவருக்கு ரஜினிகாந்த் உதவி செய்யவில்லை எனவும் முதலில் தகவல் வெளியானது. இதில் உண்மை இல்லை எனவும் அவர் இதுவரை வழங்கிய நிதி அனைத்துமே எங்களுக்காகஅளித்ததுதான். இதற்காக எங்கள் குடும்பமே நன்றிக்கடன்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.