#புதுக்கோட்டை : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்கள் மின்னல் தாக்கி பரிதாப பலி..!

புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் உள்ள திருப்புனவாசலில் உணவகம் நடத்தி வருகிறார் பழனிசாமி. இவருக்கு மகன் சஞ்சய் (17) மற்றும் மகள் சஞ்சனா(15) உள்ளனர். இவர்கள் அதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்கள்.


நேற்று வழக்கம் போல் அண்ணன், தங்கை இருவரும் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பும் நிலையில், அவர்களின் சித்தப்பா இருவரையும் இருசக்கர வாகனத்தில் உக்கார வைத்து அழைத்துக்கொண்டு பறையத்தூருக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் , அப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் , 3 பேரும் மழையில் நனைந்து கொண்டே சென்றுள்ளனர். இத‌னிடையே இருசக்கர வாகனத்தில் எதிர்பாராத விதமாக திடீரென மின்னல் தாக்கியுள்ளது. இதனால் இளையராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் காயமடைந்த அந்த இரு குழந்தைகளையும் மீட்டு அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து சிகிச்சை பலனின்றி சஞ்சய், சஞ்சனா இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர் .இது குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

கால்பந்து வீராங்கணை உயிரிழப்புக்கு 1கோடி இழப்பீடு வழங்க வேண்டும்!!! எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!!!

Tue Nov 15 , 2022
சென்னை வியாசர்பாடி பகுதியினைச் சேர்ந்தவர் பிரியா வயது 17, ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர். தேசிய அளவிலான கால்பந்து போட்டிகளில் பங்கேற்று பல சாதனைகளை படைத்து வந்தவர். இவருக்கு அண்மையில் கால்பந்தாட்ட பயிற்சியின்போது காலில் சவ்வு விலகியதை அடுத்து சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பரிசோதனைக்காக சென்றிருந்தார். அங்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சை முறையினால் இரண்டு கால்களும் அகற்றப்பட்டு, அதன் பிறகும் உயிரை காப்பாற்ற முடியாமல், இன்று […]
TH23NITINGADKARIEDAPPADIKPALANISWAMISALEMCAMPAIGN

You May Like