டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 28 வயது இளம்பெண்ணான ஷ்ரத்தாவை கொடூரமான முறையில் கொலை செய்து 35 கூறுகளாக்கி காட்டுப்பகுதியில் வீசினான். இந்த வழக்கில் அஃப்தாப் பூனாவாலா என்ற இளைஞர் கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கொலை செய்யப்பட்ட பின் ஷ்ரத்தாவை எங்கு வைப்பது என்று தெரியாமல் 300 லிட்டர் ஃப்ரிட்ஜ் வாங்கியுள்ளான். அதில் 35 கூறுகளாக உடலை வெட்டி பதப்படுத்தி உள்ளான். தினமும் இரவு வாக்கிங் செல்வது போல யாருக்கும் தெரியாமல் காட்டுப்பகுதியில் வீசியுள்ளான். ஷ்ரத்தாவின் முகம் உள்ளிட்ட முக்கிய பாகங்கள் அடையாளம் தெரியாமல் இருக்க எரிக்கப்பட்டதாகவும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட அஃப்தாபை மேலும் 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவனிடம் நாளை நார்கோ சோதனை எனப்படும் உண்மை அறியும் சோதனை நடத்தப்பட உள்ளது. பல தகவல்கள் வெளிவந்த நிலையில் கொலை செய்யப்பட்ட கத்தியை இன்னும் காவல்துறையினர்கைப்பற்றவில்லை.
ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் 13 கிடைத்துள்ளது. மற்ற பாகங்களை இன்னும் காவல்துறையினர் கண்டுபிடிக்கவில்லை. எனினும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றது. இந்நிலையில் அவர்களுக்குள் நடந்த முக்கிய கருத்து வேறுபாடுகள் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. இவர்களுக்குள் பணப்பிரச்சனை இருந்து வந்ததாக அஃப்தாப் தெரிவித்துள்ளான். இருவரும் மும்பையில் வேலையை விட்டு விட்டு பின்னர் இமாச்சல், உத்தரகாண்ட் சென்றுள்ளனர். அதைத் தொடர்ந்து டெல்லியில் ரூ.9000 வாடகையில் வீடு பார்த்துள்ளனர்.
ஷ்ரத்தா மும்பையில் இருந்தபோது பயன்படுத்திய உடைமகைளை எடுத்துவருமாறு கேட்டுள்ளார். மேலும் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து காலி செய்ய வேண்டும் எனவும் வற்புறுத்தினார் என அஃப்தாப் தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வேலை கிடைக்கும்வரை இதே வீட்டில் பகிர்ந்து கொள்வோம் என சமாதானத்திற்கு வந்துள்ளனர். இதனிடையே பண செலவுகளை சமாளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதில் அடிக்கடி தகராறு வந்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், ’’ உண்மையில் என்ன நடந்தது என கண்டறிய நார்கோ சோதனை அவசியம். இதற்கு கோர்ட்டில் அனுமதி கேட்டுள்ளோம். இல்லை என்றால் அவன் திசைதிருப்பிவிடுவான். இன்னும் கொலைசெய்யப்பட்ட ஆயுதம் கிடைக்கவில்லை. ஷ்ரத்தாவின் செல்போன் கிடைக்கவில்லை. மற்ற உடல் பாகங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே கைப்பற்றப்பட்ட காட்சிகளில் குற்றவாளியின் தெளிவான நடவடிக்கைகள் அதில் கண்டுபிடிக்கமுடியவில்லை. மேலும், அங்கிருந்த பகுதிகளில் மே மாதம் நடந்த விஷயங்கள் சேமித்து வைக்கப்படவில்லை. மேலும் குற்றவாளியின் அக்கவுண்ட் சோதனை செய்தபோது ஷ்ரத்தாவின் அக்கவுண்டில் இருந்து ரூ.54,000 பணம் பரிவர்த்தனையாகி உள்ளது. ’’ என்றார்.