டெல்லியில் மற்றொரு பயங்கரம்!! மனைவியை கொன்று அறையில் பூட்டிவிட்டு தப்பி ஓட்டம்!!

டெல்லியில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட கொடூரமான சம்பவம் இன்னும் அடங்காததற்குள் மற்றொரு பயங்கரம் அரங்கேறி உள்ளது.


டெல்லியின் சரிதாவிகார்  பகுதியில் வசித்து வந்தவர்கள் குல்சானா, ராகுல்லால் தம்பதி. கடந்த 10ம் தேதி குல்சானா வீட்டில் கதவு திறக்கப்படாததை அடுத்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து  உள்ளே சென்று பார்த்தபோது குல்சானா கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரை மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் வீட்டில் கணவன், மனைவி, மகள் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகின்றது. கணவன், மகள் இருவரையும் அந்த வீட்டில் இல்லை. இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில் துணியால் கழுத்தை இறுக்கி கொலை செய்தது தெரியவந்தது. எனவே குல்சானாவை கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளான். தலைமறைவான கணவன் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். ஒருவயது மகள் உள்ள நிலையில் தன்னுடன் அந்த மகளை அழைத்துக் கொண்டு காணாமல் போன ராகுலை போலீசார் தேடி வந்தனர்.

ராகுலின் செல்போன் எண்ணை வைத்து அவரை ட்ராக் செய்தபோது ஒரு வனப்பகுதியில் சுற்றித் திரிவது தெரியவந்தது. அவரை போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில்’’எங்கள் இருவருக்கும் இடையே தகரராறு ஏற்பட்டது. அவள் என்னிடம் ரூ.5,000 மோசடி செய்துவிட்டாள்.இதனால் சண்டையிட்டுக் கொண்டோம். இந்த சண்டையில் கொன்றுவிட்டு நான் குழந்தையுடன் சென்றுவிட்டேன்.’’ என்றார்.

ராகுல் அழைத்துச் சென்ற குழந்தையை பாட்டி வீட்டில் விட்டுவிட்டு போலீசுக்கு பயந்து காட்டுக்குள் பதுங்கியுள்ளான். இதையடுத்து போலீசார் பாட்டி வீட்டுக்கு சென்று குழந்தையை மீட்டனர். அரசு காப்பகத்தில் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.

Next Post

ஓடிக்கொண்டிருந்த லாரி மீது நடனம்… பாலத்தில் மோதி இளைஞர் பலி!!

Fri Nov 18 , 2022
ஓடிக்கொண்டிருந்த லாரி மீது உற்சாகமாக நடமாடிய இளைஞர் அங்கிருந்த பாலத்தை கவனிக்காததால் அதில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ஹுஸ்டன் சாலை அமைந்துள்ளது. அங்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக சென்று கொண்டிருந்த லாரியின் டாப்பில் ஏறி நின்று இளைஞர் ஒருவர் நடனமாடிக்கொண்டிருந்தார். அப்போது ஈஸ்டெக்ஸ் ஃப்ரிவே என்ற பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த இளைஞர் அதை கவனிக்காமல் இருந்துள்ளார். பாலத்தின் மீது வேகமாக மோதி […]
மகனுடன் பேசிவிட்டு குளிக்கச் சென்ற நேரத்தில் மரண செய்தி..!! அதிர்ச்சியில் உறைந்த தாய்..!!

You May Like