பொங்கல் வேட்டி சேலைகள் தயாரிக்கும் பணி  மும்முரம்!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட உள்ள விலையில்லா வேட்டி சேலைகள் தயாரிக்கும் பணி அதி வேகத்தில் நடைபெற்று வருகின்றது.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதிக்குள் விலையில்லா வேட்டி சேலைகள் வழங்க முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் மக்கள் நியாயவிலைக்கடைகள் மூலம் விலையில்லா வேட்டி, சேலைகளை வாங்கிக் கொள்ளலாம். பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த வருடம் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ப்ளைன் சேலைகளைப் போல் அல்லாமல் புதிய டிசைன்கள் முதல்வரிடம் காண்பிக்கப்பட்டு ஒப்புதல் கேட்கப்பட்டது. தற்போது புதிய டிசைன்கள் வேட்டி சேலைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு புதிய டிசைனில்அரசு இலவச வேட்டி சேலைகளை வழங்கப்பட இருக்கின்றது. 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதிக்குள் வேட்டி, சேலைகளை மக்களுக்கு சென்றடையும் வகையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல வண்ணங்களில் சேலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. அதிக தரமான சேலைகளாக மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பதில் அரசு தீவிரமாக உள்ளது.

Next Post

முன்னாள் அமைச்சருக்கு திடீர் நெஞ்சுவலி…!!மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு!!

Sat Nov 19 , 2022
முன்னாள் அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக அமைச்சரவையில் உறுப்பினராக இருந்தவர் திண்டுக்கல் சீனிவாசன். தற்போது அதிமுக பொருளாளராகவும் உள்ளார். சென்னையில் அவர் வீட்டில் இருந்த போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயம் தொடர்பான சிறப்பு மருத்துவர்கள் முதற்கட்ட பரிசோதனை மற்கொண்டு வருகின்றனர். எனவே தொண்டர்கள் மருத்துவமனை அருகே கூடியுள்ளனர். இதனால் […]

You May Like