பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட உள்ள விலையில்லா வேட்டி சேலைகள் தயாரிக்கும் பணி அதி வேகத்தில் நடைபெற்று வருகின்றது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதிக்குள் விலையில்லா வேட்டி சேலைகள் வழங்க முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் மக்கள் நியாயவிலைக்கடைகள் மூலம் விலையில்லா வேட்டி, சேலைகளை வாங்கிக் கொள்ளலாம். பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த வருடம் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ப்ளைன் சேலைகளைப் போல் அல்லாமல் புதிய டிசைன்கள் முதல்வரிடம் காண்பிக்கப்பட்டு ஒப்புதல் கேட்கப்பட்டது. தற்போது புதிய டிசைன்கள் வேட்டி சேலைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு புதிய டிசைனில்அரசு இலவச வேட்டி சேலைகளை வழங்கப்பட இருக்கின்றது. 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதிக்குள் வேட்டி, சேலைகளை மக்களுக்கு சென்றடையும் வகையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல வண்ணங்களில் சேலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. அதிக தரமான சேலைகளாக மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பதில் அரசு தீவிரமாக உள்ளது.