#ஸ்ரீவில்லிபுத்தூர் : தத்தெடுத்த வளர்ப்பு மகளை நாசம் செய்த தந்தை..சிறுமிக்கு நடந்த அவலம்..!

ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட பகுதியில் உள்ள விருதுநகரில்  மகேந்திரன் 54, என்பவர் திருமணம் ஆகிய நிலையில் குழந்தை இல்லாத காரணத்தினால் பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார்.


இந்த நிலையில் தனது மனைவி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து 11 வயதே ஆன அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மகேந்திரன் மட்டுமின்றி அவரது உறவினர்  சகோதரர் உறவுமுறை கொண்ட காமராஜ் பெருமாள் 25 என்பவரும் சேர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டில் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது மருத்துவ பரிசோதனை செய்த போது சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாகியுள்ளார் என்பது அறியப்பட்டது. மேலும் சிறுமியிடம் விசாரணை செய்ததில் மகேந்திரனும் மற்றும் காமராஜ் பெருமாளும் தான் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்த நிலையில், ஆயுள் தண்டனையுடன்   ரூ.ஒரு லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்திருக்கிறார் நீதிபதி பூரண ஜெய் ஆனந்த். 

1newsnationuser5

Next Post

#தேனி :மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி..! 

Fri Nov 25 , 2022
தேனி மாவட்ட பகுதியில் உள்ள பண்ணைப்புரத்தில் பாண்டி என்பவர் தனது மகள் லட்சிதா வுடன் வசித்து வருகிறார். மகள் பெரியகுளம் பகுதியில் இருக்கும் கைலாசபட்டியில் உள்ள தனியார் மகளிர் நர்சிங் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.  கல்லூரி வளாகத்திலேயே செயல்பட்டு வருகின்ற மாணவிகளுக்கான விடுதியில் தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இத‌னிடையே நேற்று முன்தைய தினத்தில் காலை நேரத்தில் விடுதியில் மூன்றாவது மாடிக்கு சென்றுள்ள இவர் […]
n4452674881669347821089afd847449cf3d0ba8a980aad79bd58575c396d37ccc077fe63fca3da3e95a809

You May Like