ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட பகுதியில் உள்ள விருதுநகரில் மகேந்திரன் 54, என்பவர் திருமணம் ஆகிய நிலையில் குழந்தை இல்லாத காரணத்தினால் பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தனது மனைவி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து 11 வயதே ஆன அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மகேந்திரன் மட்டுமின்றி அவரது உறவினர் சகோதரர் உறவுமுறை கொண்ட காமராஜ் பெருமாள் 25 என்பவரும் சேர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டில் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது மருத்துவ பரிசோதனை செய்த போது சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாகியுள்ளார் என்பது அறியப்பட்டது. மேலும் சிறுமியிடம் விசாரணை செய்ததில் மகேந்திரனும் மற்றும் காமராஜ் பெருமாளும் தான் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்த நிலையில், ஆயுள் தண்டனையுடன் ரூ.ஒரு லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்திருக்கிறார் நீதிபதி பூரண ஜெய் ஆனந்த்.