#திருச்சி :இறப்பிலும் இணை பிரியாத தம்பதிகளுக்கு.. கண்கலங்க வைத்த நெகிழ்ச்சி..!

திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள பாலக்கரை அருகில் இருக்கும் இரட்டைப் பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் தம்பதிகள் கிருஷ்ணன் (91) மற்றும் மனைவி சம்பூரணத்தம்மாள் (86). இந்த தம்பதிகளுக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். கிருஷ்ணன் என்பவர் மண்ணச்சநல்லூர் மகன் வீட்டிலும் மற்றும் சம்பூரணத்தம்மாள் திருச்சி காட்டூரில் பகுதியில் மற்றொரு மகன் வீட்டிலும் வசித்து வந்துள்ளனர்.


கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை 5.30 மணி அளவில் சம்பூரணத்தம்மாள் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரின் உடலை மகன் வீட்டில் வைப்பதற்கு அதற்காக குடும்பத்தினர் ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்துள்ளனர். சம்பூரணத்தம்மாள் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றிவர ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்த நிலையில் கிருஷ்ணனும் அன்று காலை 6.30 மணிக்கு உயிரிழந்துள்ளார். இதனை கண்ட குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து இரு தம்பதிகளின் உடல்களும் மண்ணச்சநல்லூரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மனைவி இறந்த சோகத்தில் அடுத்த சிறிது நேரத்தில் கணவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும்  சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. 

1newsnationuser5

Next Post

’பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வாழ்க்கை நாசமா போயிருச்சு’..!! கதறும் பிரபல நடிகர்..!!

Sat Nov 26 , 2022
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து வருகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கி கிட்டதட்ட 6 சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி சிலருக்கு வாழ்வில் தீர்ப்புமுனை ஏற்பட்டாலும் சிலரது வாழ்க்கையை அப்படியே திருப்பி போட்டு உள்ளது. அந்த வகையில், பிக்பாஸ் மூலம் புகழ்பெற்றவர் நடிகை வனிதா. இவருக்கு இதே தொலைக்காட்சியில் அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் கொடுத்திருந்தனர். இந்நிலையில் பிக்பாஸ் […]
’பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வாழ்க்கை நாசமா போயிருச்சு’..!! கதறும் பிரபல நடிகர்..!!

You May Like