விவசாயிகள் ரூ.80,000 மானியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம்.
மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் பல விவசாயிகள் நிம்மதி அடைகின்றனர். அந்த வகையில் காய்கறிகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி ஒரு மானிய திட்டத்தை அரசு செயல்படுத்துகிறதா என பலருக்கு இந்த தகவல் சென்று சேர்வதில்லை. அப்படி ஒரு மானிய திட்டத்தை பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழக அரசு சார்பில் பீா்க்கங்காய், புடலங்காய், பாகற்காய், சுரைக்காய், அவரைக்காய் போன்ற கொடியில் வளரும் காய்கறிகளை பந்தல் அமைத்து சாகுபடி செய்ய நிதியுதவி வழங்கப்படுகிறது. தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இந்த பந்தல் அமைக்க மானியம் கொடுக்கப்படுகிறது.
இது குறித்து பொங்கலுாா் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ஷா்மிளா; பந்தல் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.80,000 பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், எஃப்.எம்.பி. வரைபடம், கிராம நிா்வாக அலுவலா் சான்று, ஆதாா், குடும்ப அட்டை நகல், வங்கி புத்தக நகல் ஆகியவற்றுடன் தோட்டக்கலைத் துறை அலுவலகத்திற்கு சென்று மானியம் பெறலாம். மேலும், விவரங்களுக்கு 7708330870, 9095628657, 89392 63412 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.