விவசாய நிலமாக பத்திரப்பதிவு செய்ய 1 லட்சம் லஞ்சம் வேண்டும்!!! கையும் களவுமாக சிக்கிய சார்பதிவாளர்…

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் அருகே இருக்கின்ற காட்டூர் பாப்பாகுறிச்சியை சார்ந்தவர் அசோக்குமார்(42). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அசோக்குமார் அதே பகுதியில் இருக்கின்ற 21 சென்ட் விவசாய நிலத்தை சொந்தமாக வாங்கி பத்திரப்பதிவு செய்ய திருவெறும்பூர் ரிஜிஸ்டர் ஆபீஸில் விண்ணப்பம் செய்திருக்கிறார்.


அப்போது சார்பதிவாளர் பாஸ்கரன் அந்த நிலத்தை அரசு மதிப்பீட்டின் அடிப்படையில் சதுர அடியில் தான் பதிவு செய்ய இயலும் எனவும், விவசாய நிலமாக பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்றால் தனக்கு 1 லட்சம் ரூபாய் லஞ்சமாக வழங்க வேண்டும் எனவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ரியல் எஸ்டேட் அதிபர் அசோக்குமார் லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகார் வழங்கி இருக்கிறார்.

registrar officce

இந்த புகாரின் அடிப்படையில், நேற்றைய தினம் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் அனுமதியுடன் அசோக்குமார் வழங்கிய 1 லட்சம் ரூபாய் ரொக்கத்தை பெற்றுக்கொண்ட போது பாஸ்கரனை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடியாக கையும், களவுமாக பிடித்து கைது செய்து இருக்கிறார்கள்.

Newsnation_Admin

Next Post

தலைநகர் சென்னையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை! 3 கடைகளுக்கு அதிகாரிகள் சீல்!

Fri Dec 2 , 2022
தலைநகர் சென்னையில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வருபவர்கள் மீது தற்போது அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சூளை பகுதியில் சில கடைகளில் குட்கா விற்பனை செய்யப்படுகிறது என்று தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனை அடிப்படையாக வைத்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரியான சதீஷ்குமாரின் உத்தரவின் அடிப்படையில், தனிப்படையினர் தொடர்புடைய இடத்திற்கு நேரில் சென்று திடீரென்று கடைகளில் ஆய்வு செய்தனர். அதிகாரிகளின் […]

You May Like