மூன்று நாள் இடைவெளிக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடிய நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான தனிநபர் தீர்மானத்தை முன்வைப்பது முதல் திமுக ஆட்சிக்கால ஊழல் விவகாரங்கள் வரை அவையில் பல்வேறு அரசியல் விவாதங்கள் இடம்பெற்றன. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அளித்த கடிதம் தொடர்பாக ஏற்பட்ட அமளிக்கு இடையே, காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் முதலமைச்சர் விஜய் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்தார். சட்டப்பேரவை நடவடிக்கைகள் […]

ஊழல் வழக்கில் சிக்கியுள்ள தனது மகன் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.பி.ஐ-யிடம் டாக்டர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கடுமையான உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. கட்சியை அபகரிக்கும் நோக்கில் அன்புமணி போலி ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ததாக ராமதாஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. […]