பள்ளி வாகனங்கள் காலை 8.15 மணிக்குள் மாணவர்களை பள்ளிக்குள் இறக்கி விட வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தினம்தோறும் காலை நேரத்தில் பள்ளிகளுக்கு அருகே உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதனால், அலுவலகத்திற்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில், அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, தற்போது பள்ளி பேருந்துகள் மற்றும் வேன்கள் பள்ளியின் வளாகத்திற்குள்ளேயே மாணவர்களை இறக்கி விட வேண்டும்.
![போக்குவரத்து நெரிசல்..!! பள்ளி பேருந்துகளுக்கு அதிரடி உத்தரவு..!! காலை 8.15 மணி வரை தான் டைம்..!!](https://1newsnation.com/wp-content/uploads/2021/01/school-bus.jpeg)
இதேபோன்று பெற்றோர்களும் பள்ளி வளாகத்திற்குள் சென்று தங்களின் குழந்தைகளை இறக்கி விட வேண்டும். மேலும், காலை 8.30 மணிக்கு மேல் பள்ளி பேருந்துகள் பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் சாலைகளில் நிறுத்த அனுமதி கிடையாது. இதனை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, பள்ளி பேருந்துகள் மாணவர்களை காலை 8.15 மணிக்குள் இறக்கி விட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.