டிரக்கில் சிக்கிய இளைஞர் தரதரவென்று இழுத்து சென்றதால் உயிர் போன பரிதாபம்..!

இந்தியாவை சேர்ந்த கார்த்திக் சைனி என்ற மாணவர் கனடாவில் உள்ள ரொறன்ரோவில் சென்ற 23ஆம் தேதி சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பிக் அப் டிரக் சைக்கிள் மீது மோதியதில் கார்த்திக் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.


அத்துடன் அவர் தரதரவென வண்டியுடனே இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அந்த டிரக் ஓட்டுனரான 60 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஓட்டுனரின் கவனக்குறைவால் வாகனம் ஓட்டியதாகவும், மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதாகவும் சென்ற வியாழக்கிழமை அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கைதான ஓட்டுனர் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரியவந்துள்ளது. 

1newsnationuser5

Next Post

’திருமணத்தில் நன்றாக சாப்பிட உள்ளதால் எனக்கு லீவ் வேண்டும்’..!! வைரலாகும் ஆசிரியரின் ’லீவ் லெட்டர்’..!!

Sun Dec 4 , 2022
அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் விடுப்புக்காக குறிப்பிட்டுள்ள காரணங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பங்கா மாவட்டம் கச்சாரி பிப்ரா கிராமத்தைச் சேர்ந்த அஜய்குமார் என்பவர் அங்குள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் விடுப்பு கேட்டு தனது பள்ளி தலைமை ஆசிரியருக்கு லெட்டர் ஒன்றை எழுதியுள்ளார். தற்போது இந்த கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ”என் அம்மா டிசம்பர் 5 திங்கட்கிழமை இரவு 8 […]
’திருமணத்தில் நன்றாக சாப்பிட உள்ளதால் எனக்கு லீவ் வேண்டும்’..!! வைரலாகும் ஆசிரியரின் ’லீவ் லெட்டர்’..!!

You May Like