நிம்மதி…! கருகலைப்பில் தாயின் முடிவே இறுதியானது…! அதிரடியான தீர்ப்பு வழங்கி நீதிமன்றம் உத்தரவு…!

கருக்கலைப்பு விஷயங்களில் ‘இறுதி முடிவு’ ஒரு பெண்ணின் பிரசவ விருப்பத்தையும், பிறக்காத குழந்தையின் கண்ணியமான வாழ்க்கைக்கான வாய்ப்பையும் அங்கீகரிக்க வேண்டும் என கூறி டெல்லி உயர் நீதிமன்றம் திருமணமான பெண்ணை கலைக்க அனுமதித்தது. நீதிபதி பிரதீபா எம். சிங், கரு பெருமூளைக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட பெண்ணை, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ வசதி அல்லது அவர் விருப்பப்பட்ட மருத்துவமனையில் உடனடியாக மருத்துவக் கர்ப்பத்தை கலைத்து கொள்ள அனுமதித்தார்.

IMG 20221207 052109

டெல்லி உயர் நீதிமன்றத்தில் கருவில் உள்ள குழந்தைக்கு பெருமூளை வளர்ச்சி குறைபாடு உள்ளதால் கருகலைப்பு செய்ய அனுமதிகோரி 26 வயது பெண் ஒருவர் மனுதாக்கல் செய்திருந்தார். 33 வாரங்கள் ஆகும் கருவிற்கு மூளை வளர்ச்சி குறைபாடு உள்ளது பரிசோதனையில் தெரியவந்தது. எனவே, கருவை கலைக்க மருத்துவர்களிடம் கேட்டோம் அவர்கள் முடியாது என்று கை கூறிவிட்டனர். கருகலைப்பு செய்துகொள்ள தனக்கு அனுமதி வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிரதீபா சிங், “கருகலைப்பில் ஒரு தாயின் முடிவே இறுதியானதாகப் பார்க்க வேண்டும். ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதில் உள்ள வலிகள் மற்றும் கருகலைப்பில் உள்ள சிரமங்களை அறிந்துள்ளார் மனுதாரர் என்பதை உணரமுடிகிறது. பெண்ணின் விருப்பப்படி எந்த மருத்துவமனையிலும் கருகலைப்பு செய்துகொள்ளலாம் என உத்தரவிட்டார்.

Vignesh

Next Post

போலியாக ஆவணங்களை தயார் செய்து நிலத்தை அபகரித்த தந்தை மகன் அதிரடி கைது!!!

Wed Dec 7 , 2022
தற்போது உள்ள காலகட்டத்தில் அரசு துறைகளில் இருந்து தனியார் துறைகள் வரையில் பல விதத்தில் போலிகள் உலா வருகின்றன. போலி ரேஷன் கார்டு, போலி பிறப்புச் சான்று, போலி இருப்பிடச்சான்று என்று எதற்கெடுத்தாலும் அனைத்திலும் போலி வந்துவிட்டது. இது போல ஒரு போலி சான்றிதழ் சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. சென்னையை அடுத்த படப்பையை சார்ந்தவர் மோகன் இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை வழங்கியிருந்தார். அதில் […]
patta

You May Like