குருபூஜை விழாக்களின் போது வாகனங்கள் ஓட்டுவதில் விதிமீறலில் ஈடுபட்டால் ஓட்டுநரின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்தில் ஆண்டுதோறும் ஜெயந்தி விழா, குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. குருபூஜையின் போது ஆயிரக்கணக்கானோர் பால்குடம், காவடி, அக்னிசட்டி எடுத்து வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான் ஜெய்ந்தி மற்றும் குருபூஜை 28-ம் தொடங்கியது. தேவர் ஜெயந்தி இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளன. முக்கிய அரசியல் தலைவர்கள் மரியாதையும் செலுத்த உள்ளனர்.
இந்த நிலையில் தேவர் ஜெயந்தி, மருது பாண்டியர் குருபூஜை விழாக்களின் போது வாகனங்கள் ஓட்டுவதில் விதிமீறலில் ஈடுபட்டால் ஓட்டுநரின் லைசென்ஸ் ரத்து. வாகனங்களை அதிவேகமாக இயக்குவது, வாகனங்கள் மேல் அமர்ந்து செல்வது உள்ளிட்டவற்றுக்கு தடை. என் மதுரை மாவட்ட எஸ்.பி. சிவ பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.