உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஜனவரி 10ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைபடுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வரும் 25ஆம் தேதியன்று கிறிஸ்துமஸ் பண்டிகையும், 29ஆம் தேதி அன்று குரு கோவிந்த்சிங் ஜெயந்தியும் மற்றும் வர இருக்கும் ஜனவரி 1ஆம் தேதி அன்று புத்தாண்டையும் முன்னிட்டும் பல நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சிகள் கொரோனா நெறிமுறைகளை கடைபிடித்து நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
![இந்த முக்கிய தினங்களில் 144 தடை உத்தரவு..!! மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/05/202205020420301131_Tamil_News_increasing-COVID-infections-Section-144-CrPC-has-been_SECVPF.jpg)
இந்த பண்டிகை தினங்களை கருத்தில் கொண்டு அம்மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 144 தடை பல கட்சித் தொண்டர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் அனுமதியின்றி பேரணி நடத்துவதை தடுப்பதற்காகவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.