திருநெல்வேலி மருங்கால்குறிச்சியை சேர்ந்தவர் செல்லையா(45).இவர் கூலி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவருடைய மகன் மாரியப்பன் வயது 24 இதனிடையே இதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற ஊனமுற்றவரிடம் மாரியப்பன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். அவர் ஊனமாக இருப்பதை கேலி செய்து வந்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் இது போல் அடிக்கடி சண்டை நேர்ந்து வந்துள்ளது. நேற்று ராஜா மாரியப்பன் வீட்டிற்கு சென்றதாகவும், அங்கு செல்லையாவிடம் வாய் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருவருக்கும் சண்டை முற்றிய நிலையில், ராஜா பக்கத்தில் இருந்த உருட்டு கட்டையால் செல்லையாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் செல்லையா பலத்த காயமடைந்துள்ளார்.
செல்லையாவை அவரது உறவினர்கள் மீட்டுநாங்குநேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் செல்லையா மருத்துவமனைக்கு செல்லும் முன்னரே இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து நாங்குநேரி காவல்துறையினர் இது தொடர்பாக தகவலறிந்தவுடன் செல்லையாவின் உடலை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ராஜாவை கைது செய்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.