ஜப்பானிய நாட்டில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு, அந்த நாட்டு அரசானது 3 லட்சம் ரூபாயை மானியமாக வழங்குகிறது. கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில் சில ஆண்டுகளாகவே குழந்தையின் பிறப்பு விகிதமானது மிகவும் கடுமையாக சரிந்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் இறப்பு விகிதமானது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக , ஜப்பானில் மக்கள் தொகை விகிதம் தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. சென்ற ஆண்டில் கணக்கெடுப்பில் , எட்டு லட்சத்து 11 ஆயிரத்து 604 குழந்தைகள் பிறந்துள்ளது. மேலும் அதே நிலையில், 14 லட்சத்து 39 ஆயிரத்து 809 பேர் இறந்துள்ளனர்.
இறப்பை குறைக்க முடியாத நிலையில், பிறப்பின் விகிதத்தை அதிகரிக்க அந்த நாட்டு அரசு சலுகைகள் வழங்கியுள்ளது. அதில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு சலுகைகளை அரசு வழங்கியுள்ளது. அதில் ஒன்றாக, குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கான மானியத் தொகையானது 3 லட்ச ரூபாயாக உயர்த்தி அறிவித்துள்ளது.