தமிழக அரசின் சார்பில் முதியோர் மாற்றுத் திறனாளிகள் மற்றும் விதவைகள் ஆகியோருக்கு உதவித்தொகையாக(Allowance) ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு பயன்படும் வகையில் இந்த உதவிகளை அரசு வழங்கி வருகிறது. மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு 1700 ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் மாதாந்திர உதவித்தொகை உயர்த்தப்பட்டு புதிய அரசாணை ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. […]

2024-25 ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் பாராளுமன்றத்தில், இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொது தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த வருடத்திற்கான பட்ஜெட் இடைக்கால பட்ஜெட் ஆக தாக்கல் செய்யப்பட உள்ளது. நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்ட தொடர் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையுடன் பாராளுமன்றத்தில் நேற்று தொடங்கியது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய […]

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தொழிலாளர்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர்களுக்கு ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு மற்றும் ரூ. 10 லட்சம் ஆரோக்கியஸ்ரீ மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். வாகன ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உணவு விநியோகம் செய்பவர்களுடன் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆலோசனை நடத்தினார். டி-ஹப்பில் உள்ள குழுக்கள் மூலம் உருவாக்கப்படும் ஓலா செயலியின் வரிசையில் வாகன ஓட்டுநர்களுக்காக ஒரு […]

வெள்ள நிவாரண பணிகளுக்காக, அரசு அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள், தங்களின் ஊதியத்தை அளிக்க எழுத்துபூர்வமாக விருப்பம் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு தங்களின் […]

இந்தியாவில் 2025 அக்டோபர் 1 முதல் தயாரிக்கப்படும் என் 2, என் 3 வகைகளைச் சேர்ந்த மோட்டார் வாகனங்களின் ஓட்டுநர் பகுதிகளில் குளிர்சாதன அமைப்பு நிறுவுவதை கட்டாயமாக்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2025 அக்டோபர் 1 முதல் தயாரிக்கப்படும் என் 2, என் 3 வகைகளைச் சேர்ந்த மோட்டார் வாகனங்களின் ஓட்டுநர் பகுதிகளில் குளிர்சாதன அமைப்பை நிறுவுவதை கட்டாயமாக்கி 2023, டிசம்பர் 8 அன்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் […]

ரேஷன் கார்டு தொடர்பான மத்திய அரசின் புதிய அறிவிப்பு பொதுமக்களிடம் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டு தொடர்பான புதிய அறிவிப்புகள் மற்றும் அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியாகி பொதுமக்களுக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்து வருகிறது. இந்நிலையில் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டு எண்ணையும் இணைக்க வேண்டும் இன்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக ரேஷன் கார்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரது அதார் என்னும் […]

சென்னை மற்றும் அதனை சுற்றி இருக்கும் மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது. மழை நின்று சில தினங்களாகியும் மீட்பு பணிகள் இன்னும் நடைபெற்று வருகிறது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் தேங்கி இருக்கும் மழை நீர் இன்னும் வெளியேற்றப்படவில்லை. பொதுமக்கள் அடிப்படை தேவைகளான உணவுக்கும் குடிநீருக்கும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் […]

ரேஷன் கார்டு நமது நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் முக்கியமான ஆவணமாக இருந்து வருகிறது. இந்த அட்டைகளை பயன்படுத்தி அரசு ரேஷன் கடைகளில் பொருட்களை மலிவு விலையில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இது வங்கிக் கடன் மற்றும் அரசு சார்ந்த வேலைகளுக்கு முக்கிய ஆவணமாகவும் கருதப்படுகிறது. இந்த ரேஷன் கார்டில் ஒவ்வொரு வருடமும் அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் மற்றும் புதிய ஆட்கள் சேர்ப்பு செல்போன் எண்களை மாற்றுதல் போன்றவற்றிற்காக முகாம்கள் […]

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழை நாள் மக்களின் இயல்பு வாழ்க்கையே கேள்விக்குறியாகி இருக்கிறது. நகரம் முழுவதும் தண்ணீர் தேங்கி இருப்பதாகவும் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் திமுக அரசின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருக்கிறது எனவும் இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை திமுக அரசு […]

சென்னையில் பெய்து வரும் கனமழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. சாலைகள் மற்றும் தெருக்கள் வெள்ளம் சூழ்ந்த நிலையில் வீட்டிலிருந்து வெளியேற முடியாமல் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றி இருக்கும் மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த சில தினங்களாக இடைவிடாத கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் […]