நள்ளிரவில் தனியாக சென்ற இளைஞருக்கு அரங்கேறிய கொடூரம்!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நெட்டப்பாக்கம் அருகில் நள்ளிரவு நேரத்தில் ஒரு இளைஞர் மார்பில் குத்தப்பட்டு கழுத்தறு பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவ்வழியே சென்றவர்கள் இதை பார்த்துவிட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.


இந்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை சம்பவம் பற்றி விசாரித்தனர். இதில் கொலை செய்யப்பட்டு கிடக்கும் இளைஞர் ராசிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 33 வயதான காமராஜ் என்பது தெரியவந்துள்ளது.

காமராஜ் தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்த நிலையில் நேற்று இரவு வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றபோது மது போதையில் காமராஜரிடம் ஒரு கும்பல் தகராறில் ஈடுபட்டது.

இதை தட்டி கேட்டதால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் காமராஜை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த கொலை செய்தவர்கள் 17 வயதுக்கு உட்பட்ட ஏழு சிறுவர்கள் என்பது தெரியவந்து பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

1newsnationuser5

Next Post

இவர் டீச்சரா அல்லது பெண் ரவுடியா? 5ம் வகுப்பு மாணவியின் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய ஆசிரியை!

Sat Dec 17 , 2022
தற்போதைய காலகட்டத்தில் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்தவில்லை என்ற காரணத்தை முன்வைத்து அவர்களை தாக்குவது உள்ளிட்ட துன்புறுத்தலை ஒருபோதும் செய்யக்கூடாது என்று அரசாங்கம் கண்டிப்பாக தெரிவித்திருக்கிறது. இவ்வளவு ஏன், மாணவ மாணவிகள் தவறு செய்தால் கூட அவர்களிடம் முடிந்த அளவு எடுத்துக் கூறிதான் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். அவர்கள் மீது எந்த காரணத்தை முன் கொண்டும் தாக்குதல் நடத்தக் கூடாது என்று ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை […]
கேள்விக்கு பதிலளிக்காத மாணவன்..!! ஆத்திரத்தில் ஆசிரியர் அடித்ததால் வெடித்து சிதறிய நரம்பு..!!

You May Like