புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நெட்டப்பாக்கம் அருகில் நள்ளிரவு நேரத்தில் ஒரு இளைஞர் மார்பில் குத்தப்பட்டு கழுத்தறு பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவ்வழியே சென்றவர்கள் இதை பார்த்துவிட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை சம்பவம் பற்றி விசாரித்தனர். இதில் கொலை செய்யப்பட்டு கிடக்கும் இளைஞர் ராசிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 33 வயதான காமராஜ் என்பது தெரியவந்துள்ளது.
காமராஜ் தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்த நிலையில் நேற்று இரவு வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றபோது மது போதையில் காமராஜரிடம் ஒரு கும்பல் தகராறில் ஈடுபட்டது.
இதை தட்டி கேட்டதால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் காமராஜை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த கொலை செய்தவர்கள் 17 வயதுக்கு உட்பட்ட ஏழு சிறுவர்கள் என்பது தெரியவந்து பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.