வீட்டில் விபச்சார தொழில்.. ரகசிய அறையில் காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்..!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள லாமிங்டன் சாலையில் உள்ள வீட்டில் விபச்சார தொழில் நடைபெற்று வருகிறது. 20க்கும் மேற்பட்ட பெண்கள் விபச்சார தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்த சட்டவிரோத செயலில் ஈடுபடுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த பெண்கள் அழைத்து வரப்படுவதாக சமூக குற்றப்பிரிவிலிருந்து காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.


தகவல் பேரில், உண்மையைக் கண்டறிய ஒருவரை வாடிக்கையாளர்கள் போல அனுப்பி விபச்சாரம் நடப்பது உறுதியானதை தொடர்ந்து, உள்ளே இருந்த அனைவரையும் கைது செய்தனர். ஆனால் நான்கு பேர் மட்டுமே உள்ளே இருந்தனர். இதனால் அந்த நபருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர்கள் வீட்டை சுற்றி வளைத்து சோதனை நடத்தினர். ஆனால் நான்கு பேர் மட்டுமே உள்ளே இருந்தனர்.

20க்கும் மேற்பட்ட பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக புகார் வந்தாலும் இங்கு நான்கு பேர் மட்டுமே உள்ளனர். புகார் பொய்யா என்று போலீசார் வீட்டைச் சுற்றிப் பார்த்தனர். அப்போது அங்கே ரகசிய அறை ஒன்றை கண்டுபிடித்தனர். அறையின் உள்ளே சென்று பார்த்த போது போலீசாருக்கு ஆச்சரியம் காத்திருந்தது.

அந்த அறையில் 26 பெண்கள் இருந்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் அவர்கள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் என்றும் அவர்கள் பலவந்தமாக விபச்சார தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து ரகசிய அறையில் இருந்து 26 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

1newsnationuser5

Next Post

#சென்னை: பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி..!

Fri Dec 23 , 2022
எஸ்.வி.சேகர் 1980களில் தமிழ்த் திரையுலகில் நன்கு அறியப்பட்ட நடிகர். காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த அவர் தற்போது அங்கு நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். இன்று காலை சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், தான் சென்னையில் உள்ள இஎம்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார்.  அவர் பதிவிட்டுள்ளதாவது :இன்று காலை அடிக்கடி ஏற்பட்ட வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக மெட்ராஸ் இஎன்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். தற்போது, நான் குணமடைந்து வீடு திரும்ப […]
Screenshot 2022 12 23 10 59 07 72 40deb401b9ffe8e1df2f1cc5ba480b12

You May Like