காதல் மனைவியை நடுரோட்டில் சரமாறியாக வெட்டிக் கொன்ற சம்பவம் –  மதுரையில் பரபரப்பு!

மதுரையில் நடுரோட்டில் வைத்து  காதல் மனைவியை கணவரே வெட்டிக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை தெற்கு வாசல் சப்பானி கோவில் தெருவை சார்ந்தவர் மீனாட்சி சுந்தரம். திருமணமான இவருக்கு இரண்டு மகள்கள். இவரது மூத்த மகளான வர்ஷா பிளஸ் டூ முடித்துவிட்டு தட்டச்சு பயிற்சி படித்து வந்திருக்கிறார். அப்போது இவருக்கும் கீரை துறையைச் சார்ந்த பழனி (25) என்ற எம் பி ஏ மாணவருக்கும்  பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியிருக்கிறது. இந்நிலையில்  கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டு  தனி வீட்டில் வாழ்ந்து வந்தனர். திருமணமான  சில நாட்களிலேயே கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி  சண்டைகள் வர ஆரம்பித்திருக்கிறது. இதனால் மனமுடைந்த வர்ஷா  தனது கணவருடன் கோபித்து விட்டு பெற்றோருடன் வந்து தங்கி இருக்கிறார். திருமணம் முடிந்த 40 வது நாளிலேயே பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்குப் பிறகு தனது மாமனார் வீட்டிற்கு வந்த பழனி  மனைவியை தன்னோடு வருமாறு  அழைத்திருக்கிறார். இதற்கு வர்ஷா திட்டவட்டமாக  மறுத்து விடவே இருவருக்கும் இடையே மீண்டும்  பிரச்சனை உருவாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து வர்ஷாவின் பெற்றோர் இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர். அதன் பேரில் இருவரையும் அழைத்து  விசாரித்தது காவல்துறை. அப்போது இருவரும்  நீதிமன்றத்தை அணுகி  பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிந்து விடுவதாக ஒப்புதல் கடிதம் காவல்துறையில் எழுதிக் கொடுத்தனர். இந்நிலையில் நேற்று மதியம்  வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று வந்திருக்கிறார் வர்ஷா. அப்போது ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர் அவரிடம் தகராறு செய்து  பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவர்  உடலின் பல பகுதிகளில்  சரமாறியாக குத்தினார். வர்ஷாவின் அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள்  அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக  தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் சம்பவம் நடந்த இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ஹெல்மெட் அணிந்து வந்து கொலை செய்த நபர்  வர்ஷாவின் கணவர் பழனி என கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து பழனி கீரைத்துறை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரிடம் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

Baskar

Next Post

ரோகிணி தியேட்டரில் பரபரப்பு! தண்ணீர் தொட்டிக்குள் அழுகிய சடலமாக மீட்கப்பட்ட எலக்ட்ரீசியன்!

Sat Feb 4 , 2023
சென்னை கோயம்பேடு ரோகிணி  தியேட்டரின் தண்ணீர் தொட்டிக்குள் அழுகிய நிலையிலிருந்து எடுக்கப்பட்ட சடலத்தால்  அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது . சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ளது பிரபலமான ரோகினி தியேட்டர் . இந்த தியேட்டரில் தமிழ் சினிமாவின் முன்னணி திரைப்படங்கள் எப்போதும் வெளியிடப்படும். இந்த தியேட்டரின் வளாகத்தில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. இதில் வாரம் ஒருமுறை லாரிகளின் மூலம் தண்ணீர் நிரப்பப்படுவது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் தண்ணீர் […]

You May Like