சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம்!

சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.

Covid test

சீனாவில் அதிவேகமாக பரவிவரும் BF 7 கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குறிப்பாக டெல்லி மும்பை சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சீனா ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா அறிகுறிகள் அல்லது தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ள மத்திய அமைச்சர், அவர்களது ரத்த மாதிரிகளை உடனடியாக மரபணு ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

KOKILA

Next Post

சட்டவிரோதமாக வாத்து பண்ணையில் சிறுமிகளை அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு! அதிரடி தண்டனை வழங்கிய புதுவை போக்சோ சிறப்பு நீதிமன்றம்!

Sat Dec 24 , 2022
அரசாங்கம் என்னதான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இது போன்ற தவறுகளை செய்பவர்கள் திருந்துவது இல்லை. தொடர்ந்து அது போன்ற செயல்களில் ஈடுபட்டு தான் வருகிறார்கள். இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெறுவதை கேட்கும் போதும், பார்க்கும்போதும் இந்த அரசாங்கத்தின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையின்மை என்பது ஏற்படத்தான் செய்கிறது. என்னதான் கடுமையான சட்டங்களை அரசாங்கம் இயற்றி வந்தாலும் அதனை […]
n4550919321671854319504e218338dee13201076b8a457bfd9162dabc13b595326316b74fc58685c8b9ae8

You May Like