அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் ஆதாருடன் இணைக்கப்படாத பான் “செயல்படாது” என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்: வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, விலக்கு வகையின் கீழ் வராத பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும், 31.3.2023 க்கு முன் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். 1.04.2023 முதல், இணைக்கப்படாத பான் செயலிழந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ் எம் எஸ் மூலம் எப்படி இணைப்பது…?
உங்கள் பான் கார்டை ஆதார் அட்டையுடன் SMS மூலம் இணைக்க விரும்பினால், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து செய்தியைத் தட்டச்சு செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணிற்கு SMS அனுப்பவும்.
இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்வது எப்படி…?
ஆதார் எண்ணுடன் பான் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துகொள்ள எளிமையான வழிமுறை முதலில் நீங்கள் வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.incometax.gov.in என்ற தளத்திற்குச் செல்லுங்கள். பிறகு “Our Services” என்பதன் கீழ், முகப்புப்பக்கத்தில் ‘இணைப்பு ஆதார்’ என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை தேர்வு செய்யவும். அடுத்ததாக ‘‘Link Aadhaar Know About your Aadhaar PAN linking Status’ என்ற ஆப்ஷனை சொடுக்கவும். பிறகு உங்களுக்கு ஒரு புதிய பக்கம் திறக்கும்.
அதில் உங்கள் பான் மற்றும் ஆதார் அட்டை விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளிடவும். பிறகு உங்கள் விவரங்களை விவரங்களை பூர்த்தி செய்தவுடன், ‘View Link Aadhaar Status’ என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்தால் உங்களுடைய பான் கார்டு எண் ஆதார் உடன் இணைக்கப்பட்டு உள்ளதா இல்லையா என்ற விவரம் உங்களுக்கு தெரிந்து விடும்.