ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் உள்நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களை செதுக்கி மக்களின் மனங்களில் அதை பிரதிபலித்து வருகிறார். இந்நிலையில், உலகம் முழுதும் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு ஒடிசா மாநிலம் கோபால்பூர் கடற்கரையில் பிரமாண்டமான ‘சான்ட்டா கிளாஸ்’ (கிறிஸ்துமஸ் தாத்தா) முகத்தை மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் வடிவமைத்துள்ளார்.

சுமார் 1500 கிலோ தக்காளியை பயன்படுத்தி 27 அடி உயரம், 60 அடி அகலத்தில் சாண்டா கிளாஸை உருவாக்கினார். இதனை ஏராளாமான சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.