மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்.., சென்னையில் வந்தது புதிய கட்டுப்பாடு?

சீனாவில் தற்போது BF.7 வகை கொரோனா வைரஸ்-ன் தாக்கம் வேகம் எடுத்துள்ளது. சீன மட்டும் இல்லாமல் தென்கொரிய ஜப்பான் போன்ற பல நாடுகளில் இந்த BF.7 வகை கொரோனா அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் அதனுடைய பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டாலும் அதிக இழப்பு இல்லை. இந்த புதிய வகை கொரோனா பரவலை தடுக்க விமனநிலையத்தில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது, வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் விமான நிலையத்தில் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப் படுகின்றனர்.


தமிழக அரசு சார்பில் கொரோனவை கட்டுப்படுத்த, கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டு சமூக இடைவெளி போன்ற கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகளும், பொதுமக்களும் சமூக இடைவெளியுடன் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என்று சிஎம்டிஏ உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

முகக்கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் என்று விதிமுறை கொரோனா அதிகரிக்கும் காலத்தில் பயன்பாட்டுக்கு வரும், தற்போது கொரோனா அதிகரிக்கு சூழல் உள்ளதால் இந்த விதிமுறை தமிழகமெங்கும் விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsnation_Admin

Next Post

மீண்டும் ‘Work From Home'..!! வேலைக்கு ஆட்கள் எடுக்கும் பணியை நிறுத்தும் முக்கிய நிறுவனங்கள்..!!

Tue Dec 27 , 2022
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து பணி செய்யவும், வேலைக்கு ஆட்கள் எடுக்கும் பணியை நிறுத்தி வைக்கவும் சில நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. சீனாவில் தற்போது பிஎஃப் 7 (Omicron BF.7) என்ற வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளதால், மீண்டும் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், […]
Work From Home முறையை அதிகம் விரும்பும் இந்திய ஊழியர்கள்..!! ஏன் தெரியுமா..? கருத்துக் கணிப்பு முடிவில் தகவல்..!!

You May Like