‘திராவிட அரசன்’ என்று பெயர் வைத்த தமிழக முதல்வர்..!

தாம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரியின் ஆண் குழந்தைக்கு முதல்வர் ஸ்டாலின் ‘திராவிட அரசன்’ என்று பெயர் சூட்டினார். இது மக்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்தது. 


சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இன்று நடைபெற்ற இந்திய வரலாற்றுச் சங்கத்தின் 81வது மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். 

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் தனது குழந்தையுடன் செயல் தலைவர் ஸ்டாலினிடம் ஆசி பெற்றார். 

அதற்கு அவர், ‘நாங்கள் இன்னும் பெயர் வைக்கவில்லை, என் மகனுக்கு நீங்கள் பெயர் வைக்க வேண்டும்’ என்றார். உடனே முதல்வர் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் குழந்தையைத் தூக்கி ‘திராவிட அரசன் ’ என்று பெயரிட்டார்.

1newsnationuser5

Next Post

#அரியலூர்: 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. 54 வயது முதியவர் கைது..! 

Wed Dec 28 , 2022
அரியலூர் மாவட்ட பகுதியில் உடையார்பாளையம் அருகே அமைந்துள்ள விக்ரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாண் கருணாநிதி (54)என்பவர் . இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமியை கடந்த ஜூலை மாதத்தில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த விக்ரமங்கலம் போலீசார் கருணாநிதியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கறிஞர் ராஜா […]
n4562161121672207666791b4f03dee9b876431703e1b663a97798376392e95abcce45bec5413e60c32166f

You May Like