முன்னாள் உலக கத்தோலிக்கர்களின் தலைவர் போப் 16-வது பெனடிக் காலமானார்!…

முன்னாள் உலக கத்தோலிக்கர்களின் தலைவரான போப் 16-வது பெனடிக் உடல் நலக்குறைவால் காலமானார்.


முன்னாள் உலக கத்தோலிக்கர்களின் தலைவரான போப் 16-வது பெனடிக் வயது முதிர்வு காரணமாக பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்பு அவர் வாட்டிகனில் உள்ள குருமார்களின் மடத்தில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில் 95 வயதாகும் 16-வது பெனடிக்கிற்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக வாடிகனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக வாடிகன் தெரிவித்திருந்த நிலையில், போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் இன்று காலை 9:34 மணிக்கு வாட்டிகனில் உள்ள மேட்டர் எக்லேசியா மடாலயத்தில் சிகிச்சைப் பலனின்றி காலமானார் .

யார் இந்த 16-ம் பெனடிக்ட்? : 16-ம் பெனடிக்ட் இவரது இயற்பெயர் ஜோசப் ரட்சிங்கர். கடந்த 1977 முதல் 1982 வரை ஜெர்மனியின் முனிச் உயர் மறைமாவட்ட பேராயராக பதவியில் இருந்தார். கடந்த 2005ம் ஆண்டு முதல் 2013 வரை போப் ஆண்டவராக இருந்த இவர் கடந்த 2013-ம் ஆண்டு வயது முதிர்வு காரணமாக போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகினார். கடந்த 1415-ம் ஆண்டுக்கு பிறகு போப் ஆண்டவர் பதவியில் இருந்து தாமாக பதவி விலகியவர் 16-வது பெனடிக் என்பது குறிப்பிடத்தக்கது.

KOKILA

Next Post

துணை இல்லாமல் வசிக்கும்பெண்களை குறி வைத்து சில்மிஷம்! 2 ஆசாமிகள் அதிரடி கைது!

Sat Dec 31 , 2022
தற்போது எல்லோரின் கைகளிலும் ஆண்ட்ராய்டு போன் வந்துவிட்டது. இந்த ஆண்ட்ராய்டு போன் மூலமாக பல நன்மைகளும் நடைபெறுகின்றன, பல தீமைகளும் நடைபெறுகின்றன. ஆனால் இந்த ஆண்ட்ராய்டு போன் வந்ததற்கு பிறகு சமூக வலைதள பயன்பாடு என்பது அதிகரித்து காணப்படுகிறது. whatsapp, facebook, twitter உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருக்காத நபர்களே இல்லை. ஆனால் பெண்களைப் பொறுத்தவரையில் இது போன்ற சமூக வலைதளங்களை முழுமையாக பயன்படுத்துவதை யாராலும் தடை செய்ய […]
இதுக்கா இப்படியொரு தண்டனை...மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்...கேரளாவில் பயங்கரம்!

You May Like