காவலரை கழுத்தை நெறித்த சம்பவம்..! 

தஞ்சாவூர் மாவட்ட பகுதியில் , கும்பகோணம் மத்துலாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செந்தாமரை (41). வெளிநாட்டில் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தவர். இவர் தனது வருமானத்தை ஆவணங்கள் ஏதுமின்றி கும்பகோணத்தில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.


செந்தாமரை சில ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் திரும்பி அழகுக்கலை வேலை செய்து வருகிறார். வெளிநாட்டில் இருந்த போது அனுப்பிய பணம் மற்றும் நகைகளை திருப்பி தருமாறு உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கேட்டபோது, ​​கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் நேற்று மதியம் சோழபுரம் பெண் எஸ்ஐ சுமதியிடம் புகார் அளித்தனர். ஆனால், ஆவணங்கள் எதுவும் இல்லததால் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த செந்தாமரையை போலீசார் இன்று 12 மணியளவில் மறித்து தடுத்து நிறுத்தினர்.  இதனால் ஆத்திரமடைந்த செந்தாமரை போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

அப்போது வழக்கு பணிக்காக வந்த சோழபுரம் பெண் எஸ்எஸ்ஐ சுமதியின் கழுத்தை, செந்தாமரை கழுத்தை நெரித்து தாக்கினார். மேலும், தலைமைக் காவலரும் சரோஜினியைத் தாக்கியுள்ளார். இதையடுத்து கும்பகோணம் கிழக்கு போலீசார் செந்தாமரையை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

1newsnationuser5

Next Post

வரி செலுத்துவோருக்கு குட் நியூஸ்..!! 2023 பட்ஜெட்டில் காத்திருக்கும் சம்பவம்..!! என்ன தெரியுமா..?

Thu Jan 5 , 2023
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி அன்று மத்திய பட்ஜெட் 2023-24ஐ தாக்கல் செய்கிறார். ஒவ்வொரு ஆண்டையும் போல், இந்த வருடமும் மத்திய பட்ஜெட்டில் பொதுமக்கள் மற்றும் பல துறைகள் சார்பாக அதிகமான எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அதிலும், குறிப்பாக வரி செலுத்துவோருக்கு நடப்பாண்டு பட்ஜெட்டில் அதிக கோரிக்கைகள் இருக்கிறது. வரி விவகாரத்தில் பெரிய அளவிலான முடிவுகள் எடுக்கப்பட்டு சுமார் 9 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால், நடப்பாண்டு பட்ஜெட் […]

You May Like