சேலம் மாவட்ட பகுதியில் உள்ள ஓமலூரில் தினேஷ் எனபவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பட்டதாரி பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண் கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து காட்பாடி பகுதியில் அமைந்துள்ள ஒரு TNPSC தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் காதலன் தினேஷ் அந்த பெண்ணிடம் காட்பாடியில் வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து கணவன் மனைவியாக வாழலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதன்படி இருவரும் கடந்த 1 வருடமாக கணவன் மனைவியாக அதே பகுதியில் வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் அந்தப் பெண் கர்ப்பமாகியுள்ளார். இதன் காரணமாக அப்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதலர் தினேஷிடம் வற்புறுத்தி கேட்டுள்ளார். தினேஷ் அதற்கு மறுத்து கர்ப்பத்தை கலைக்குமாறு சொலலியுள்ளார். இதனால் அதிர்ச்சடைந்த அந்த பெண் தனது பெற்றோரிடம் எல்லாவற்றையும் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து பெண்ணின் பெற்றோர்கள் தினேஷின் வீட்டிற்கு நேரடியாக சென்று தங்களது மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளனர். ஆனால் தினேஷ் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டார்.
இதனால் அந்தப் பெண்ணின் பெற்றோர் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாகியுள்ள தினேஷை தேடி வருகின்றனர்.