காதல் என்பது ஒரு அழகான உணர்வு அந்த காதல் நினைத்தால் எதையும் செய்து விட முடியும். அப்படிப்பட்ட காதலை ஒரு சிலர் கொச்சைப்படுத்தும் விதமாக நடந்து கொள்கிறார்கள்.
முறை தவறிய உறவில் இருக்கும் பலர் அவர்கள் இருக்கும் உறவுக்கு வாய்க்கும் பெயர் காதல் அப்படி முறை தவறிய உறவில் இருப்பவர்களுக்கு மட்டும் பிரச்சனை ஏற்பட்டால் பரவாயில்லை. அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கும் இப்படிப்பட்டவர்களால் பிரச்சனை ஏற்பட்டால்….?
ஓசூர் அருகே உள்ள பெரிய மேனகரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளியான எல்லப்பா இவர் ஒரு வாய் பேச முடியாதவர். இவருடைய மகன் கார்த்தி (17) அந்த கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் விவசாயத் தோட்டத்தில் கூலி வேலை பார்த்து வருகிறார்.
அந்த 17 வயது சிறுவனுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ண ரெட்டி என்பவரின் மனைவி அர்ச்சனா (27) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு அவர்களுடைய பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியிருக்கிறது.
ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணம் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்ட அர்ச்சனா, கணவர் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு அந்த சிறுவனுடன் பெங்களூரு பகுதிக்கு சென்று விட்டார். அங்குள்ள போதனஹள்ளி என்ற பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் தங்கி வாழ்ந்து வந்துள்ளனர்.
அர்ச்சனாவுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என 2️ குழந்தைகள் இருக்கின்ற நிலையில் குழந்தைகளை பராமரிக்க இயலாமல் அவருடைய கணவர் ராமகிருஷ்ண ரெட்டி கடுமையான அவதிக்குள்ளானார்.
இதனைத் தொடர்ந்து அவர் மனைவி அர்ச்சனாவை பல பகுதிகளில் தேடி இருக்கிறார்.
கடைசியாக அவர் பெங்களூர் போதனை பகுதியில் இருப்பதை அறிந்து கொண்ட ராமகிருஷ்ண ரெட்டி தன்னுடைய உறவினர்களுடன் அந்த பகுதிக்கு சென்று மனைவியை மீட்டு உள்ளார் அப்போது அவருடன் இருந்த சிறுவன் கார்த்தியை அவரது உறவினர்கள் கடுமையாக தாக்கியிருக்கிறார்கள்.