உறங்கி கொண்டிருந்த சிறுவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி.. உதட்டில் முத்தம் குடுத்த முதியவர்..!

கேரள மாநில பகுதியில் உள்ள கண்ணூர் மாவட்டத்தின் தலச்சேரி பகுதியில் மம்முட்டி என்கிற 76 வயதான முதியவர் பள்ளூர் பகுதியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்து வருவது வழக்கமாக இருந்துள்ளார். 


சம்பவம் நடைபெற்ற அன்று அந்த உறவினர் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அச்சமயத்தில் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த 17 வயது சிறுவனை முதியவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து உதட்டை கடித்துள்ளார். 

இதனா‌ல் அந்த சிறுவன் தூக்கத்தில் இருந்து அதிர்ச்சி அடைந்து அலறி எழுந்துள்ளான். முதியவர் கடித்ததில் உதட்டில் காயம்பட்டு ரத்தம் வந்த நிலையில், உடனே ஓடிச் சென்று தன் பெற்றோரிடம் சொல்லியுள்ளான். 

பெற்றோர்களும் மகனின் உதட்டில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்ததை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் பள்ளூர் பகுதி காவல் நிலையத்திற்குச் சென்று மம்முட்டி மீது புகார் கொடுத்தனர்.

காவல்துறையினர் மம்முட்டி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

1newsnationuser5

Next Post

5 வருடத்திற்கு முன்பு வீட்டை விட்டு வேளியே சென்ற பெண்.. காவல் அதிகாரியாக திரும்பி வெற்றி..!

Thu Jan 19 , 2023
பீகார் மாநில பகுதியில் உள்ள முர்சாபூர் பகுதியை வசித்த 16 வயது சிறுமி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போய்விட்டதாக  அளிக்கப்பட்ட புகார் அப்படியே கிடப்பில் கிடந்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் எஸ்.ஹெச்.ஓ வாக வந்த அரவிந்த் குமார் என்பவர் இப்புகாரை எடுத்துள்ளார்.  புகாரின் பேரில் காணாமல் போன சிறுமியின் தகப்பனாரிடம் விசாரித்தபோது ஒரு 3 நபர்களை குறிப்பிட்டு அவர்கள்தான் தன் மகளை கடத்தி சென்றிருக்க வேண்டும் என்று […]
காவல்துறையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 5% இடஒதுக்கீடு..! தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு..!

You May Like