சன் டிவியில் பரபரப்பான மெகா தொடராக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ரோஜா தொடரில் கதாநாயகியாக நடித்து, தமிழக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை பிரியங்கா.
இந்த தொடர் சற்றேற குறைய 3 வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
அதோடு டிஆர்பிஎல் நம்பர்-1 இடத்தை தக்க வைத்திருந்த இந்த தொடர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது.
இந்த சூழ்நிலையில் தான் இந்த தொடரில் கதாநாயகியாக நடித்திருந்த நடிகை பிரியங்கா தற்சமயம் ஒரு புதிய தொடரில் களம் இறங்கி உள்ளார்.
சீதாராமன் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கின்ற இந்த தொடர் மிக விரைவில் ஒளிபரப்பாக உள்ளது இந்த தொடரில் பிரியங்கா கதாநாயகியாக நடிக்க வருகிறார்.
அதோடு இந்த தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.