வாக்காளர் அட்டை விவரங்களில் மாற்றம் செய்பவர்களுக்கு க்யூஆர் கோடு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வாக்காளர் அட்டை இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ ஆவுது தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட புதிய வாக்காளர் அடையாள அட்டைகள், க்யூஆர் குறியீடு போன்ற மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 16 லட்சம் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சடிக்கப்பட்டுள்ளதாகவும், பழைய அட்டை உள்ள வாக்காளர்கள் அவற்றை மாற்றி புதிய அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
மாநிலத்தில் முதற்கட்டமாக, பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு புதிய அட்டைகள் முதலில் விநியோகிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.