தலைக்கேறிய கஞ்சா போதை.. காமவெறிக்கு இரையாகிய 3 வயது மகள்.! துடிதுடித்து இறந்த பிஞ்சு.!

தன் காதலியின் மூன்று வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து  கொலை செய்த காதலனை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.


கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த பெண் ஒருவர் அங்குள்ள  ஜவுளி தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வருகிறார். கணவரால் கைவிடப்பட்ட அந்தப் பெண் தனது மூன்று வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்த நிலையில் 26 வயது இளைஞனுடன் அவருக்கு காதல் ஏற்பட்டு இருக்கிறது. அதன் பிறகு அந்த இளைஞருடன் ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கிறார் அந்த இளம் பெண்.

கடந்த திங்கள்கிழமை வழக்கம் போல் வேலைக்குச் சென்ற அந்தப் பெண் திரும்பி வந்து பார்த்தபோது தனது குழந்தை மயக்க நிலையில் இருந்திருக்கிறது. இதனைக் கண்டு அதிர்ச்சி யடைந்த அவர்  குழந்தையை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கிறார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அது ஏற்கனவே இறந்து விட்டதாக  தெரிவித்திருக்கின்றனர். மேலும் குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததை கண்டு சந்தேகமடைந்த அந்தப் பெண்  தன் காதலரிடம் விசாரித்த போது அந்தப் பெண்ணை தாக்கத் தொடங்கிருக்கிறார் அவரது காதலர். இதனால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அந்த இளைஞரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

காவல்துறை விசாரணை நடத்தியதில் கஞ்சா போதையில் அந்தப் பச்சிளம் குழந்தையை  பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒத்துக் கொண்டிருக்கிறார் அந்த போதைக்கு அடிமையான இளைஞர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்திருக்கிறது காவல்துறை. போதை இளைஞரால்  பச்சிளம் குழந்தை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு  கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அச்சத்தையும் கோபத்தையும் ஏற்படுத்திருக்கிறது.   

1newsnationuser5

Next Post

பிரபல கதாசிரியர் மற்றும் இயக்குனர் திடீர் மரணம்! திரையுலகம் அஞ்சலி.!

Thu Feb 2 , 2023
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சண்முகப்பிரியன்  மரணம் அடைந்துள்ளது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர்  டைரக்டர் சண்முகப்ரியன். இயக்குனராக மட்டுமல்லாமல் கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகவும் விளங்கி வந்தவர் இவர். பிரம்மா வெற்றி விழா  சின்னத்தம்பி பெரியதம்பி போன்ற வெற்றி படங்களுக்கு கதை ஆசிரியராகவும்  வசனகர்த்தாவாகவும் இருந்திருக்கிறார் சண்முகப்பிரியன். தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இவர் […]
WhatsApp Image 2023 02 02 at 7.15.32 PM

You May Like