செல்போனை தராவிட்டால் வெட்டிவிடுவேன்!… கத்தியை காட்டி தந்தையை மிரட்டிய மகன்!… சீனாவில் அதிர்ச்சி!

சீனாவில் செல்போனில் கேம் விளையாட விடாமல் தடுத்த தந்தையை கத்தியை காட்டி 13 வயது மகன் மிரட்டிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சீனாவின் குவாங்சி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன், பள்ளி செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் பல மணி நேரம் செல்போனில் விளையாடியுள்ளார். இதனால், பெற்றோர் பலமுறை கண்டித்தும் கேட்காததால், செல்போனை பறித்து அவனது தந்தை, மறைத்து வைத்துள்ளார். இதனால், அத்திரமடைந்த சிறுவன், செல்போனை தருமாறு தந்தையிடம் பிடிவாதம் பிடித்ததோடு, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மிரட்டியுள்ளார். செல்போனை தராவிட்டால் வெட்டிவிடுவேன் என அந்த சிறுவன் கூறிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சிறுவனின் செயலுக்கு அதிர்ச்சி தெரிவித்துள்ள பலரும், செல்போன் விளையாட்டால் இதுபோன்ற நிலைமைகள் தொடரக்கூடாது என கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே, இதுதொடர்பாக விசாரித்து வரும் சீன காவல்துறையினர், சிறுவனுக்கு மன நல ஆலோசனை வழங்கவும் முடிவு செய்துள்ளனர்.

KOKILA

Next Post

டிகிரி படித்தவர்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் ₹ 18,536 சம்பளத்தில் வேலை வாய்ப்பு!

Thu Feb 16 , 2023
திண்டுக்கல் மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அங்கு காலியாக உள்ள சமுதாயப் பணிக்கான காலி இடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 28.02.2023 தேதிக்குள் திண்டுக்கல் மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரில் சென்று சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு அரசின் சமூக பாதுகாப்புத்துறை மிசன் வாட்சால்யா திட்டத்தின் கீழ் இயங்கி வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு […]
IMG 20230216 WA0012

You May Like