சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5 கூடுதல் நீதிபதிகள்…! இன்று பதவியேற்பு…!

இந்திய தலைமை நீதிபதியுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு பின்வரும் வழக்கறிஞர்களை சென்னை, அலகாபாத் மற்றும் கர்நாடக மாநில உயர்நீதிமன்றங்களின் கூடுதல் நீதிபதிகளாக நியமிப்பதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார். இதன்படி, வழக்கறிஞர்களான லெஷ்மண சந்திர விக்டோரியா கௌரி, பிள்ளைப்பாக்கம் பஹுகுடும்பி பாலாஜி, கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன், நீதித்துறை அதிகாரிகளான ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், சையத் கொமார் ஹசன் ரிஸ்வி, மனீஷ்குமார் நிகம், அனிஷ் குமார் குப்தா, நந்த் பிரபா சுக்லா, ஷிடிஜி ஷைலேந்திரா, வினோத் திவாகர் ஆகியோர் அலகாபாத் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், வழக்கறிஞர்கள் விஜய்குமார் அடகௌடா பாட்டில், ராஜேஷ் ராய் கலங்கலா ஆகியோர் கர்நாடக மாநில உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Vignesh

Next Post

’முத்தம் கொடுத்த மாயக்காரி’..!! இளம்பெண்ணை புதருக்குள் தூக்கிச் சென்ற வாலிபர்..!! உதட்டை கடித்து துப்பிய சம்பவம்..!!

Tue Feb 7 , 2023
வேலைக்குச் சென்ற பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரின் உதட்டை இளம்பெண் ஒருவர் கடித்து துப்பியிருக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீரட் பகுதியில் கடந்த 4ஆம் தேதி அன்று, இளம்பெண் ஒருவர் வயல் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த வாலிபர், அந்த இளம்பெண்ணை பின் தொடர்ந்து சென்றிருக்கிறார். பின்னர், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றதும் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக புதர் பகுதிக்குள் இழுத்திருக்கிறார். […]

You May Like