எரிக்சன் நிறுவனம் உலகளவில் 8,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
கடந்த ஆண்டு முதலே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. குறிப்பாக அமேசான், மெட்டா, கூகுள், ஓலா, ஸ்விகி உள்ளிட்ட பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதே போல் மைக்ரோசாஃப்ட் தொடங்கி விப்ரோ வரை பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களும் பணி நீக்கம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.. இதே போல் ஜூம், யாஹூ, கோ டாடி போன்ற நிறுவனங்களும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி வந்தன..

இந்நிலையில் எரிக்சன் நிறுவனமும் பணி நீக்கம் செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் இணைந்துள்ளது.. தொலைத்தொடர்பு உபகரண தயாரிப்பு நிறுவனமான எரிக்சன், செலவுகளைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, உலகளவில் 8,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உல்ளது.. ஸ்வீடனில் சுமார் 1,400 பேரை பணியில் இருந்து நீக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த பணிநீக்கம் குறித்து, ஏற்கனவே பல நாடுகளில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.. உலகளவில் 105,000 க்கும் அதிகமானோர் எரிக்சன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.. இந்த சூழலில் இந்த பணி நீக்க அறிவிப்பு ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
கடந்த ஆண்டு முதலே, அமேசான், மைக்ரோசாப்ட், ட்விட்டர், இண்டெல், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தன.. 2023-ம் ஆண்டில் மட்டும், 300க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் 1 லட்சத்துக்கும் அதிகமான தொழில்நுட்ப பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..