சிவகாசி அருகே ஆத்தூர் சுப்ரமணியபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (29) இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 3️ மாதத்திற்கு முன்னர் திருமண நடைபெற்றது இந்த சூழ்நிலையில், அதே ஊரைச் சார்ந்த தன்னுடைய நண்பரான முத்துராஜ் (38) என்ற நபருடன் மணிகண்டன் மது அருந்தி இருக்கிறார். அப்போது மாற்றுத்திறனாளியான முத்துராஜின் உடல் குறைப்பாட்டை மணிகண்டன் கேலி செய்ததாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக, ஆத்திரம் கொண்ட முத்துராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனின் கழுத்தில் சாரமாரியாக குத்திருக்கிறார். இது பலத்த காயம் அடைந்த மணிகண்டனை மீட்டிங் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்து விட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாரனேரி காவல்துறையினர் மணிகண்டனை கொலை செய்த முத்துராஜ் கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையில் தன்னுடைய உடல் ஊனத்தை கிராமத்தில் பலரும் கிண்டல் செய்து வந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்தேன் எனவும், மணிகண்டனும் தன்னை கிண்டல் செய்ததால் ஆத்திரத்தின் உச்சத்தில் அவரை கொலை செய்தேன் என்று வாக்குமூலம் வழங்கி இருக்கிறார்.
ராட்சசன் திரைப்படத்தில் கிறிஸ்தோபர் கதாபாத்திரத்தில் வரும் நபர் தன்னுடைய உடல் தோற்றத்தை கேலி செய்ததால் கொலை செய்ய ஆரம்பிப்பார்.அதேபோன்று அரங்கேறி இருக்கின்ற இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.