கர்நாடகாவில் மனதை உலுக்கும் சம்பவம்! வீட்டில் ஏசி வெடித்து 2 குழந்தைகள் உட்பட மூன்று பேர் உடல் கருகி பலி!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் ஏசி வெடித்ததில் ஒரு பெண் உட்பட இரண்டு குழந்தைகள் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலத்தின் ராயச்சூர், சக்தி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏசி வடித்ததால் ஏற்பட்ட தீயில் உடல் கருகி ஒரு பெண் உட்பட இரண்டு குழந்தைகள் பலியாகி இருக்கின்றனர். அந்த வீட்டில் ஏசி வெடித்து தீ பரவிய போது உள்ளிருந்த அந்தப் பெண் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகளால் வெளியே வர முடியவில்லை அதற்குள் தீ வேகமாக பரவியது. இதன் காரணமாக அந்த மூவரும் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.


இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏசி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூவர் பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இனி கோடை நெருங்கிக் கொண்டிருப்பதால் எல்லோருக்கும் ஏசியின் தேவை இருக்கும். இதன் காரணமாக அவற்றை நாம் முறைப்படி கையாள வேண்டும். இது போன்ற விபத்துகளை தவிர்க்க ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.

1newsnationuser5

Next Post

"என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா......, நான் ஆர்டர் பண்ணது வெஜ், ஆனா வந்தது......"! வசமாக மாட்டிய ஜொமேட்டோ!

Tue Mar 7 , 2023
ஆன்லைன் மூலம் நாம் ஆர்டர் செய்யும் போது நாம் ஒரு பொருளை ஆர்டர் செய்திருக்க அவர்கள் நமக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பொருளை அனுப்பி வைப்பார்கள் இது ஆன்லைனில் அவ்வப்போது நடக்கும் வாடிக்கையான ஒரு விஷயம். ஜோமேட்டோ ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் உணவை ஆர்டர் செய்த ஒரு பெண்ணுக்கு இவ்வாறான ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அதை அவர் வீடியோ எடுத்து தனது சமூக வலைதளத்தில் போட்டு இதுகுறித்து […]
IMG 20230307 WA0099

You May Like