மத்திய அரசின் உதவித்தொகையை பெறும் வகையில் மாணவர்கள் ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கை இணைக்க உத்தரவு.
9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மாதாமாதம் ரூ.1000 உதவித்தொகை அளிக்கும் NMMS திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் மேல்நிலைக் கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய கல்வி துறை சார்பில் ஒவ்வோர் ஆண்டும் தேர்வு நடத்தப்பட்டு, 1 லட்சம் பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 6,695 மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.
இதற்குத் தகுதிவாய்ந்த மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்ய தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்புப் படிக்கும் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதலாம். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு 9-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்புப் படிக்கும் வரை மாதம்தோறும் ரூ.1000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இந்நிலையில் அரசின் உதவித்தொகையை பெறும் வகையில் மாணவர்கள் ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கை இணைக்க உத்தரவிட்டுள்ளது.
