தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இருந்தாலும் அவ்வப்போது அந்த கட்சிகளுக்கு இடையே பனிப்போர் வெடித்து வருகிறது. அதேபோன்று தற்போதும் அந்த கட்சிகளுக்கு இடையில் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது.
இந்த நிலையில் தான் ரயில்வே திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் சாலை திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி வரும் 23ஆம் தேதி தமிழகத்திற்கு வர உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.
அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றன என்று சொல்லப்பட்டாலும் அந்த இரு கட்சிகளுக்கு இடையில் மோதல் போக்கு நீடித்து வருகின்ற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழக வருவது தமிழக அரசியல் களத்தில் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. இன்று தமிழகத்தில் பாஜக அலுவலகங்களை திறப்பதற்கு கிருஷ்ணகிரிக்கு அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.