கரூர் அருகே பொரணியைச் சார்ந்த இளம் பெண் ஒருவர் திருமணமான இரண்டு வாரங்களில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. கரூர் மாவட்டத்தில் தாந்தோணி மலை பாரதி நகரைச் சார்ந்தவர் ராக பிரியா. 27 வயதான இவருக்கு கடந்த மாதம் 23ஆம் தேதி சுதர்சன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து இரண்டு வாரங்களேயான நிலையில் ராக பிரியா தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பவம் தொடர்பாக தற்போது ஆர் டி ஓ விசாரணை நடைபெற்று வருகிறது.
தனது தற்கொலை தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதி இருக்கும் ராகப்பிரியா அது தொடர்பாக உருக்கமான வீடியோ ஒன்றையும் பதிவு செய்து இருக்கிறார். அந்த உருக்கமான வீடியோவில் தனக்கும் தனது கணவருக்கும் இடையேயான திருமண வாழ்க்கை இரண்டு நாட்கள் மட்டுமே சந்தோஷமாக இருந்ததாக கூறியுள்ளார். அவருக்கு ரம்யா என்ற பெண்ணுடன் தகாத உறவு இருந்ததால் தன்னை ஒரு பொருட்டாகவும் மதிக்கவில்லை என உருக்கத்துடன் கூறி இருக்கிறார். மனதளவில் தனது பெற்றோருக்காகவே எல்லா கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்ட தன்னால் இனி பொறுத்துக் கொள்ள முடியாமல் தனது வாழ்வை முடித்துக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய சாவிற்கு ரம்யா என்ற பெண்ணும் சுதர்சன் ஆகியோர்தான் முழு காரணம் எனவும் அந்த வீடியோவிலும் கடிதத்திலும் குறிப்பிட்டிருக்கிறார் ராக பிரியா. சம்பவம் தொடர்பாக தற்போது ஆர் டி ஓ விசாரணை நடைபெற்று வருகிறது.